மாவட்டம்

புதிய தார்சாலையில் புல் வளர்த்து அழகு பார்க்கும் நகராட்சி ஒப்பந்ததாரர் !.?

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையில் புள் வளர்த்து அழகு பார்ப்பதாக நகராட்சி ஒப்பந்ததாரர் மீது பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பல்லடம் நகராட்சி வருவாய் ஈட்டுவதில் தமிழகத்திலேயே 3 வது இடத்தில் உள்ளது. மேலும் 18 வார்டுகளை உள்ளடக்கிய பல்லடம் நகராட்சியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்டுள்ளது. இதனிடையே பல்லடம் நகராட்சி துணை தலைவர் நர்மதா இளங்கோவன் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 13 வது வார்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவசரகதியில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார் சாலை கையால் மேலோட்டமாக போடப்பட்டதால் பாலம் பாலமாக பெயர்ந்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சுமார் 85 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டதாக கூறப்படும் இந்த தார் சாலை புதிதாக போடப்பட்ட சில நாட்களிலேயே புல் முளைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து கணபதி நகர் பொதுமக்கள் கூறும் போது அவசரகதியில் சாலை பணியை மேற்கொண்டதாகவும், பணி மேற்கொள்ளும் போது கேட்டதற்கு முறையான பதில் கூற மறுத்ததாக கூறுகின்றனர். மேலும் கண்பதி நகரில் போடப்பட்டுள்ள தரமற்ற தார் சாலைகளில் வாகன ஓட்டிகள் சேற்றில் இயக்குவது போல் வாகனத்தை இயக்கவேண்டியுள்ளதாகவும், பல இடங்களில் துடப்பத்தை வைத்து கூட்டி எடுத்தாலே சாலைகள் பெயர்ந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனிடையே சாலைப் பணிகளை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகாரிகளிடம் சாலையின் தரம் குறித்து கேட்டதற்கு அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறைப்படித்தான் சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள். பெயரளவில் பொதுமக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் விதமாக தரமற்ற தார் சாலைகளை அமைத்ததோடு அதற்கு ஒரு விளக்கம் அளித்து அதிகாரி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தரமற்ற தார் சாலை அமைத்து அதன் மீது புள் வளர்த்து அழகு பார்த்த நகராட்சி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீண்ட காலம் பயன்படுத்தும் விதமாக சாலையை அமைக்கவேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாகும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button