அரசியல்

வேலை வாங்கி தருவதாக அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர் 5.5 லட்சம் மோசடி

சென்னை ஆதம்பாக்கம் அடுத்த மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் முத்துசாமி. தலைமை செயலக ஊழியர். இவருக்கு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டனின் அலுவலக உதவியாளர் காந்தியுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.இதன் அடிப்படையில், ‘’உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு அமைச்சர் சிபாரிசின் பேரில் வேலை வாங்கி தருகிறேன்’ என முத்துசாமிக்கு. காந்தி ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய முத்துசாமி, கடந்த சில மாதங்களுக்கு முன் தனது உறவினர் ஒருவருக்கு வேலை வாங்கி தரும்படி காந்தியிடம்  5.5 லட்சத்தை கொடுத்திருக்கிறார்.

அதன்பிறகு தனது உறவினருக்கு காந்தி உறுதி கூறியபடி வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்திருக்கிறார். இதையடுத்து முத்துசாமியை பணம் கொடுத்த உறவினர்கள் தொந்தரவு கொடுத்துள்ளனர்.இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசில் அமைச்சரின் உதவியாளர் காந்திமீது நேற்று முன்தினம் முத்துசாமி புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சேகர்சிங் வழக்குப்பதிவு செய்து, அமைச்சரின் உதவியாளர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button