தமிழகம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த “மதபோதகர் போக்சோ” சட்டத்தில் கைது

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்துள்ள கூனம்பட்டியில் ஏழை எளிய மாணவர்கள் தங்கி படிக்க விடுதி உள்ளது. இதனிடையே அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில் திருப்பூருக்கு அருகே இருந்து தங்கும் விடுதிக்கு திரும்ப வந்த 14 வயது சிறுமியை விடுதியில் சேர்க்க நிர்வாகத்தினர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரணை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளிவந்தன. விடுதியுடன் கூடிய மதபோதனை கூடத்தில் மதபோதகரான ஆண்ட்ரூஸ் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

பின்னர் சம்பவம் குறித்து ஊத்துகுளி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஊத்த்குளி காவல் ஆய்வாளர் கவிதா போக்சோ சட்டத்தின் கீழ் ஆண்ட்ரூசை கைது செய்துள்ளார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button