விமர்சனம்

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் வரலாறு காப்பாற்றப்படுமா ? “வரலாறு முக்கியம்” திரைவிமர்சனம்

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், ஜீவா, காஷ்மிரா, நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “வரலாறு முக்கியம்”

கதைப்படி… கோயம்புத்தூரில் பள்ளிக்கூட ஆசிரியராக பணியாற்றி வரும் கே.எஸ் ரவிக்குமார், சரண்யா தம்பதியினரின் மகன் கார்த்திக் ( ஜீவா ) யூடியூப் சேனல் நடத்தி வருவதாகச் சொல்லி சுற்றித்திரிந்து வருகிறார். அதே தெருவில் இரண்டு பெண்களுடன் புதிதாக குடியேறுகின்றனர் கேரள தம்பதியினர். அதில் ஒருவர் புதிதாக குடியேறியதால் ஜீவாவின் வீட்டிற்கு இனிப்பு கொடுப்பதற்காக ( பிரக்யா ) வரும்போது ஜீவா அவரது அழகில் மயங்கி அவரைக் காதலிக்க முடிவு செய்து பின் தொடர்கிறார்.

பின்னர் அவரது வீட்டிற்கு எதிரில் நின்று கொண்டிருக்கும் போது அவரது சகோதரி ( காஷ்மிரா ) யைப் பார்த்ததும் அவர்மீது காதல் வயப்படுகிறார். அதன்பிறகு பல இடங்களில் அவரைப் பின்தொடர்ந்து தனது காதலை வெளிப்படுத்துகிறார். அவர் ஜீவாவின் காதலை ஏற்க மறுக்கிறார். விடாமல் பின் தொடர்கிறார். இறுதியில் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை….

மனதுக்கு பிடித்த பெண்ணை துரத்தி துரத்தி காதலை வெளிப்படுத்தி, அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது போன்ற கதைகள் கொண்ட நூற்றுக்கணக்கான படங்கள் வந்திருந்தாலும், அந்தப் படங்களில் ஏதாவதொரு கதை இருக்கும். ஆனால் “வரலாறு முக்கியம்” என பெயர் வைத்துவிட்டு கதை எதுவும் இல்லாமல் இரட்டை அர்த்த வசனங்களை மட்டுமே நம்பி படத்தை வெளியிட்டுள்ளார்கள். விடிவி கணேஷ் காமெடி என்கிற பெயரில் ஆபாசத்திற்கு மட்டுமே அவரை பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர். திரைக்கதை எங்கெங்கோ திசைமாறி செல்கிறது.

தரமான படங்களை தயாரித்து வெளியிடும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் எப்படி கதையே இல்லாமல் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தார்கள் என்கிற சந்தேகம் எழுகிறது. மற்றபடி படத்தைப் பற்றி பேசுவதற்கு பெரிதாக எதுவும் இல்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button