தமிழகம்

பல்லடத்தில் பள்ளி முதல்வரை தனி அறையில் அடைத்து வைத்து அழகு பார்த்த தனியார் பள்ளி..! : அதிர்ச்சி ரிப்போர்ட் !

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செயல்பட்டு வருகிறது கண்ணம்மாள் நேசனல் பள்ளி. இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். மேலும் பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியம் கடந்த ஓராண்டுக்கு முன்னர் காலமாகிவிட்டதால் அவரது பேத்தி அப்ரிஜிதா பள்ளியின் தாளாளராக உள்ளார். மேலும் பள்ளியின் முதல்வராக ரீனா கிருஷ்டி என்பவர் பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் பள்ளி நிர்வாகம் சார்பில் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. மனுவில் பள்ளியில் சுமார் 65 லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக பள்ளி முதல்வர் ரீனா கிரிஷ்டி உட்பட மூவர் மீது புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பள்ளி முதல்வரை பள்ளி வளாகத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக ஆன்லைனில் காவல்துறைக்கு புகார் அளித்திருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து பள்ளி முதல்வர் ரீனா கொடுத்த புகாரின் பேரில் பள்ளி தாளாளர் அப்ரிஜிதா, வத்சலா, சங்கர்கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் மீது பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே மிகவும் பிரபலமான தனியார் பள்ளியான கண்ணம்மாள் நேசனல் பள்ளி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இந்த பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியின் பின்புலம் குறித்து விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ராயப்பேட்டை பெனிபிட் ஃபண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனம் 600 கோடிக்கு மேல் மோசடி செய்து தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் அனைவரும் அறிந்ததே. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர்தான் இந்தப் பள்ளியின் தாளாளர் சுப்பிரமணி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விரைவில் நடைபெறவுள்ள தேர்வுகளில் மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெறவும் பள்ளி கல்வித்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது கல்வி மீது ஆர்வம் கொண்ட அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button