தமிழகம்

நள்ளிரவில் நடமாடும் கொள்ளையர்கள்…., கோயில், மளிகைக் கடையில் கைவரிசை.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது செம்மிபாளையம் ஊராட்சி. இப்பகுதிக்குட்பட்ட சாமிகவுண்டன்பாளையம், குப்புசாமி நாயுடு புரம், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள குப்புசாமிநாயுடுபுரத்தில் அதிகாலையில் மளிகை கடையின் பின்புற பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கடைக்கு சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த சுமார் 5 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதனையடுத்து சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மளிகை கடை மட்டுமின்றி செம்மிபாளையம் மாரியம்மன் கோயில், மற்றும் அருள்மிகு வேணுகான கிருஷ்ணப் பெருமாள் திருக்கோவில் பூட்டும் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தப்பி ஒடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடமாடும் கொள்ளையர்களால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button