தமிழகம்

நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – சகாயம்

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சென்னை அறிவியல் நகர துணைத்தலைவர் சகாயம் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் பூவானம் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை சகாயம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் “ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் நினைத்தையெல்லாம் வெளியில் சொல்லிவிட முடியாது. ஐ.ஏ.எஸ் அலுவலர்களுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. அந்த அடிப்படையில்தான் செயல்பட முடியும். அரசாங்கத்தின் செயல்பாடுகளையோ அல்லது அரசியல் ஆளுமைகளின் கருத்துகளுக்கு எதிர்கருத்துகளோ சொல்ல முடியாது. அடிப்படையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகாரிகளுக்கென்று சில உரிமைகளை இருக்கிறது. அந்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக நேர்மையான அலுவலர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button