கடன் தொல்லையால் பிரதமரை பாராட்டிய பிரபல நடிகர்..!.?
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2022/11/Screenshot_2022_1110_234905.jpg)
நடிகர் விஷால் கடந்த வாரம் ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். உடனே இந்த செய்தி காட்டுத் தீ போல பரவி பாரதீய ஜனதா கட்சியினர் பரபரப்பாகி, விஷால் நடிகை குஷ்பு மூலமாக பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து கட்சியில் இணைய இருப்பதாகவும், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் சினிமாக்காரர்கள் அதிகமாக வசிக்கும் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் பேசிக்கொண்டனர்.
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2022/11/202005131625279592_Tamil_News_Vishal-helps-to-poor-people_SECVPF.jpg)
இதுசம்பந்தமாக சினிமா வட்டாரத்தில் விசாரித்தபோது…. சரியான திட்டமிடல் இல்லாமல் இருந்ததாலும், படங்களின் தொடர் தோவ்விகளாலும் விஷாலுக்கு 85 கோடிக்கு மேல் கடன் சுமை அதிகரித்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் தினந்தோறும் கடனைக் கேட்டு நெருக்கடி கொடுத்தும், மிரட்டியும் வருகின்றனர். இதனால் தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்த விரும்புகிறாராம் விஷால். இதுதான் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி பாரதீய ஜனதா கட்சியினரோடு நெருக்கம் காட்டுவதற்கான உண்மையான காரணம் என்கிறார்கள்.