தமிழகம்

காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சா..!.? ஜெயிலில் திட்டம் தீட்டியதாக பரவிய வைரல் வீடியோ

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதாப்பூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது செந்தில் நகர். இப்பகுதியில் சுமார் 250 குடும்பத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். மேலும் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீடுகள் அமைந்துள்ளது. இதனிடையே இப்பகுதி ஊருக்கு ஒதுக்கு புறமாக அமைந்திருப்பதால் இப்பகுதியில் உள்ள சிலர் கஞ்சா மற்றும் மது குடித்துவிட்டு அடிக்கடி ரகளையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே தினனந்தோறும் ஏதாவது ஒரு வீட்டில் பொருட்கள் காணாமல் போகும் தொடர் சம்பவங்கள் நடந்துவந்துள்ளது. இதனிடையே காணாமல் போன பொருட்கள் அருகில் உள்ள பழைய இரும்புக்கடையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, இது குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் மாதப்பூர் ஊராட்சி பகுதிகளில் கேபிள் வயர்கள் மற்றும் வீடு கட்டப்பட்டு வரும் இடங்களிலிருந்து கட்டுமாணப்பொருட்கள் காணாமல் போனதை அடுத்து அப்பகுதியினர் சம்பவம் குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு எண் 100 க்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட புகார்தாரர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆசாமி ஒருவர் செந்தில் நகர் குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் திரவியத்தை கொலை செய்தால் தனது குடும்பத்தார் வீட்டை விற்று 10 லட்சம் வரை செலவு செய்வார்கள் எனவும், ஏற்கனவே சிறையில் இருந்த போது காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச திட்டம் தீட்டியதாகவும் பேசிய பகீர் வீடியோ வைரலாகி வருகிறது.

பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வீடியோவில் பேசிய நபர் யார் என போலீசார் அடையாளம் காணவேண்டும். ஏற்கனவே காவல் ஆய்வாளர் மகன் பூபாலன் என்பவரிடம் வழிப்பறி மற்றும் கஞ்சா விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் சிலர்தான் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை உண்டாக்குவதோடு, வீட்டிலுள்ள பொருட்களையும் திருடி விடுவதாக குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களின் உயிரைப்பாதுகாக்க பல்லடம் காவல்துறை தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button