தமிழகம்

பரமக்குடி அருகே சாலை துண்டிக்கப்பட்டதால், போக்குவரத்து பாதிப்பு ! சிரமப்படும் பொதுமக்கள் !

தமிழகத்தில் வடகிழக்கு பருவநிலை தொடங்கியுள்ள நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. பரமக்குடியில் இருந்து முத்துசெல்லாபுரம் வழியாக எஸ்.காவனூர் செல்லும் பாதையில் உள்ள கால்வாய் பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எஸ் காவனூர் கிராமத்திற்கு செல்லும் பேருந்து பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மாற்று வழியில் பள்ளிக்கு சென்றனர். கால்வாய் பாலம் உடைந்ததால் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலாய்குடி கண்மாய் நிரம்பி வெங்கட்டாங்குறிச்சி கால்வாயில் செல்லும் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளதால் சாலையில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக பாலத்தை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலை துண்டிப்பு காரணமாக எஸ். காவனூர் கிராமத்தினர் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி அத்தியாவசிய தேவைகளுக்கு சென்று வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button