தமிழகம்

சாதனையாளர்களுக்கு “ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது” வழங்கும் விழா

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு மூத்த பத்திரிகையாளரும், நாற்காலி செய்தி ( மாதம் இருமுறை ) இதழின் துணை ஆசிரியருமான கே.எம். சிராஜுதீன் தலைமை வகித்தார். சதாசிவம், அமித் குமார், அப்துல் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி பி. வெங்கடேசன் ஏபிஜே அப்துல் கலாம் விருதுகளை பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு வழங்கி வாழ்த்துரை வழங்கினார். மேலும் நடிகர் அருள்மணி, வெற்றி செல்வா, காஞ்சி முத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சமூக சேவகர்கள் சுஜாதா, குணசேகரன், நடிகைகள் ரிச்சா, சாந்தினி,அனு கிருஷ்ணா, வைஷாலி, ஜில், சஹானா உள்ளிட்ட சாதனையாளர்கள் விருது பெற்றனர்.

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவிற்கு நவீன பைன் ஆர்ட்ஸ் நிறுவனம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button