தமிழகம்

பல்லடம் அருகே குடிபோதையில் மனைவியை கொன்று தற்கொலை செய்துகொண்ட கணவன்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணவன் மனைவி மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் தங்கவேல்(55) கூலித் தொழிலாளி. இவருக்கு புஷ்பவதி(48) என்கிற மனைவியும், கோகிலா(32) என்கிற மகளும், மதன்குமார் (25) என்கிற மகனும் உள்ளனர். மேலும் கோகிலாவிற்க்கு திருமணம் ஆகி கணவருடன் வசித்துவருகிறார்.

இந்நிலையில் தங்கவேலுக்கு குடிப்பழக்கம் உள்ளதாகவும் இதன் காரணமாக அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பால் ஊற்றும் வேலை பார்த்து வரும் மணிகண்டன் வழக்கம் போல் காலை 3.30 மணிக்கு பால் ஊற்ற சென்றுவிட்டார். இதனை அடுத்து காலை உறவினரின் மகன் ஒருவர் தங்கவேலின் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்துப் பார்த்தபோது தங்கராஜ் தூக்கில் தொங்கிய படியும் புஷ்பவதி தரையில் சடலமாக கிடந்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் பிரேதத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தங்கராஜ் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரத்தில். மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனை அடுத்து உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போதை பழக்கம் கணவன் மனைவி உயிரை பறித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button