தமிழகம்

மத்திய அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் மீது அவதூறான குற்றசாட்டுகளை சுமத்தி பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை மூலமாக சோதனைகள் நடத்துவதாகவும், தேசிய தலைவர்களை கைது செய்து மத்திய அரசு சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாகவும், அதனைக் கண்டித்து கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரி தோவாளை ஒன்றியம் மற்றும் பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக கண்டித்து திட்டுவிளை ஜங்சனில் போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து கட்சி கூட்டமைப்பு தலைவர் தாஸ் தலைமை தாங்கினார். விவசாய சங்க தலைவர் ரவி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் உதயகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், பாப்புலர் ஃபிரண்ட்ஸ் ஆப் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செய்யது இஷாக், எஸ் டி பி ஐ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரபிக் பிரிதளாசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் மிக்கேல் ஆகியோர் உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மாத்தூர் ஜெயன் மற்றும் பூதப்பாண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் மரியாதை அற்புதம் அசாருதீன் நபீலா ஆலிமா மற்றும் எஸ்டிபி ஐ கட்சி நகரத் தலைவர் ஷேக் மைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர. ஆர்ப்பாட்டத்தில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button