தமிழகம்

சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து துணைத் தலைவரின் பெயரில் ஒன்பது லட்சம் மோசடி

சங்கரன்கோவில் அருகே உள்ள பெருமாள்பட்டி ஊராட்சியில் பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வருபவர் ரமேஷ்குமார் மனைவி மாரியம்மாள். இவரது கையெழுத்தை போலியாக போட்டு பஞ்சாயத்து தலைவி குருவம்மாள், அவரது கணவர் காளிராஜ், பஞ்சாயத்து செயலாளர் சீனியம்மாள் ஆகியோர் ரூ.9 லட்சத்தை காசோலை மூலம் வங்கியிலிருந்து எடுத்து மோசடி செய்ததாக கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் பஞ்சாயத்து துணைத்தலைவி மாரியம்மாள் புகார் அளித்துள்ளார்.

இவரது புகாரையடுத்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button