தமிழகம்

“ஐசரி கணேஷ்” மீது ஐந்து பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு

வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது சம்பந்தமாக கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் இன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கல்லூரியை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் உள்ளிட்ட இவர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனையில் கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட ஏழுபேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தினார். அந்த விழாவில் அப்போது முதலமைச்சராக இருந்த பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர் பட்டாலத்தையே நடிகை காஜல் அகர்வாலுடன் நெருக்கமாக புகைப்படம் எடுக்க வைத்து அசத்தினார் ஐசரி கணேஷ்.

இப்போது தான் தெரிய வருகிறது தனது கல்லூரிக்கு எப்படி அனுமதி வாங்கினார் என்று திரையுலகினர் பேசிக் கொள்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button