அரசியல்
சேலத்தில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2022/08/IMG-20220807-WA0048-780x470.jpg)
விலைவாசி உயா்வை கட்டுப் படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் AB.பாஸ்கர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி, சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது காவல்துறையினர் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்து வைக்கப் பட்டனர். மேலும் மாவட்ட துணைத் தலைவா் பச்சப்பட்டி பழனிசாமி சரவணன்.ராகுல்காந்தி பேரவை தலைவா் சேகா்.சேலம் முபாரக். பிரேம்குமாா்.பாபு.
முருகன்.ராமு சூரியா.தினேஸ் ஆகியோர் உள்பட கைது செய்தனர்.