தமிழகம்

வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர். மாணவ, மாணவியர் மகிழ்ச்சி

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 12 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர்  R.N.ரவி  கலந்துகொள்கிறார் என வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர்  ஐசரி கணேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…சென்னை பல்லாவரம் “வேல்ஸ் பல்கலைக்கழகத்தின்” 12 வது பட்டமளிப்பு விழா வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு பல்கலைகழக வளாகத்தில் உள்ள “வேலன் அரங்கில்” நடைபெற உள்ளது.
இதில் சிறப்பு அழைப்பாளராக  தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவிக்கவுள்ளார். இதனால் மாணவ, மாணவியர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11 வது பட்டமளிப்பு விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலி பரப்புத்துறை & இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர்  சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button