தமிழகம்

அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட “செஸ் ஒலிம்பியாட்” விழிப்புணர்வு போட்டிகள்

தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான செஸ் போட்டிகள் நடைபெற்றன. பார்த்திபனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் பரமக்குடி ஒன்றியத்தில் இருந்து 25 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 136 மாணவ – மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டிகளை நெல்மடூர் ஊராட்சி மன்ற தலைவி சுகன்யா, மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் மாணவ – மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் ஜூனியர் மாணவர்களுக்கு ஒலிம்பியாட்டில் பயிற்சிகளும், சீனியர் மாணவர்கள் பார்வையாளர்களாகவும் அனுமதிக்கப்படுவார்கள். செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு செஸ் போட்டிகளில் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button