சினிமா

விமர்சனம் என்கிற பெயரில், பிரபல நடிகர் மிரட்டப்படுகிறாரா..?.!

நடிகர் பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் “இரவின் நிழல்”. இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்திற்கு இரண்டு சர்வதேச விருதுகளும் கிடைத்துள்ளது. கடந்த வாரம் “இரவின் நிழல்” படம் பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சிகள் காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு பத்திரிகை, ஊடகவியலாளர்கள் விமர்சனங்களை எழுதியிருந்தனர்.

இந்தப் படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது என பத்திரிகையாளர்கள் அனைவரும் தங்களது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் யூ டியூப்பர் புளூ சட்டை மாறன் என்பவர் மட்டும் “இரவின் நிழல்” சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட வில்லை என தனது கண்டுபிடிப்பாக பேசி வந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து அவரால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் ஒருவர் அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்துள்ளார். ஏனென்றால் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களிடம் தங்களது படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களை தவிர்க்க வேண்டுமானால் மூன்று லட்சம் தாருங்கள் என மிரட்டி பணம் கேட்டுள்ளார். அதனால் தான் அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்தேன் என்கிறார் அந்த தயாரிப்பாளர்.

புளூ சட்டை மாறன் ஒரு படம் எடுத்தார். அந்தப் படம் சம்பந்தமாக தனியார் தொலைக்காட்சியினர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பாதியில் எழுந்து போனவர் தான் இந்த மாறன். இவரது படத்தைப் பற்றிய தகவல்களையை சொல்ல முடியாமல் ஓடிய இவர், மற்றவர் படங்களை விமானங்கள் செய்வதற்கு தகுதியானவரா என்கிற சந்தேகம் எழுகிறது என்கிறார்கள் சினிமாத்துறையினர்.

தற்போது நெகடிவ் விமர்சனங்களை தவிர்க்க சில பத்திரிகை தொடர்பாளர்கள் தான் தயாரிப்பாளர்களிடம் விளம்பரம் என்கிற பெயரில் இவர்களுக்கு பெரும் தொகையை வாங்கி கொடுக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. சமீபத்தில் விஜயின் படத்திற்கு பணத்தை பெற்றுக் கொண்டு நெகடிவ் விமர்சனங்களை பேசியதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button