சினிமா

எஸ்.ஏ.சந்திரசேகர் செய்த ஆயுள்விருத்தி பூஜை… கலந்து கொள்ளாத விஜய்.. வேதனையில் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்தில் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பெற்ற மகன் இல்லாமல் தனியாக ஆயுள் விருத்தி பூஜை செய்து கொண்டார். பெற்றோருக்கு பிள்ளைகள் இணைந்து செய்ய வேண்டிய இந்த பூஜையை எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா தம்பதியினருக்கு தற்போது இருக்கும் ஒரே மகனான நடிகர் விஜய் உடன் இருந்து பண்ணாதது குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சனையை மேலும் அதிகரித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சினிமா விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரும், அவரது மனைவி ஷோபா சந்திரசேகரும் கலந்து கொண்டனர். அப்போது விஜய்யின் அம்மாவிடம் உங்கள் மகனிடம் ஏதாவது கூற விரும்புகிறீர்களா? என கேட்டபோது ஏக்கத்துடன் எனது மகன் என்னை ஒரே ஒரு முறை கட்டித்தழுவ வேண்டும் என்றார். தன் மகன் தன்னை ஆரத்தழுவ வேண்டும் என்று மூன்றாம் நபரிடம் கேட்டுப்பெற்றனர் எஸ்ஏசி தம்பதியினர். ரசிகள் இதனை ஒரு சம்பவமாக கடந்து சென்று விட்டாலும், பெற்ற மகனை மூன்றாவது நபர் மூலம் ஆரத்தழுவ கேட்டதன் பின்னணியில் ஒரு தாயான ஷோபாவிற்கு எவ்வளவு வலிகள் இருந்திருக்கும்.

இதேபோல் தனது எண்பதாவது பிறந்த நாளை தனது பெற்ற பிள்ளையான விஜய் இல்லாமல் தனது மனைவியுடன் மட்டும் கேக் வெட்டி கொண்டாடி அதனைப் புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார் எஸ்ஏ.சந்திரசேகர்.

தமிழ் திரையுலகில் தற்போது மாஸ் நடிகராக கொண்டாடப்படும் நடிகர் விஜய்யை நாயகனாக்க எஸ்.ஏ.சந்திரசேகர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நாயகனான விஜய்யை இளைய தளபதி விஜய் என்கிறவரை உயர வைத்த எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போது பெற்ற மகன் அருகே கூட செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்.

விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இருக்கும் பிரச்சனைக்கு ரசிகர் மன்றத்தை நிர்வகிப்பது தொடர்பான முரண்பாடுகள் தான் காரணமாகின. நேரடி அரசியலில் தீவிரம் காட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர், அதற்கு மகனின் ரசிகர் மன்றத்தை பயன்படத்த ஆரம்பித்ததில் ஏற்பட்ட பிரச்சனை, தற்போது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆயுள்விருத்தி பூஜையில் மகன் விஜய் கலந்து கொள்ளாமல் தவிர்க்கும் நிலைக்கு வந்து நிற்கிறது. எஸ்.ஏ சந்திரசேகருக்கு கடந்த ஜூலை இரண்டாம் தேதியோடு எண்பது வயது பூர்த்தி அடைந்தது.

இதனையடுத்து திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆயுள்விருத்தி பூஜை செய்ய முடிவு எடுத்தார். பொதுவாக எண்பது வயது நிறைவு அடைந்தவர்களுக்கு அவரது பிள்ளைகள் இந்த பூஜையை செய்வது வழக்கம். எஸ்.ஏ.சந்திரசேகருக்கு தற்போது இருக்கும் ஒரே மகன் விஜய் முன்னின்று இந்த ஆயுள் விருத்தி பூஜையை நடத்தியிருக்க வேண்டும்.

தந்தையுடன் மனக்கசப்பில் இருக்கும் விஜய் இந்த ஆயுள்விருத்தி பூஜை நடத்த திருக்கடையூர் வர மறுத்துவிட்டதாக கூறுகிறார்கள். இதனால் தான் தனது பிறந்தநாளை மகன் இல்லாமல் மனைவி ஷோபாவுடன் தனியாக இருப்பதை தெரிவித்து பல திரைப்படங்களில் பெற்றோர்கள் பற்றி பெருமையாகப் பேசிய நடிகர் விஜய், தனது தந்தையின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டக்கூட வரவில்லையா? என ரசிகர்களை பேசவைத்தார். இதன்பிறகும் இறங்கி வராத விஜய் கடைசி வரை தந்தையின் எண்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு திருக்கடையூரில் நடைபெற்ற ஆயுள்விருத்தி பூஜைக்கு கடைசி வரை வரவே இல்லை.

இதனால் தனது மனைவி ஷோபாவுடன் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்று கோ பூஜை, கலச பூஜை செய்துவிட்டு ஆயுள்விருத்திக்காக 16 கலசங்கள் வைத்து சதாபிஷேகம், ஆயுஷ்ஹோமம் போன்றவற்றை தங்களுக்காக தாங்களே செய்து கொள்ளும் நிலை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஏற்பட்டது. இதற்குப் பிறகும் கூட இந்த பூஜைகளின் மொத்த புண்ணியமும் தங்கள் மகன் விஜய்க்கே சென்று சேர வேண்டும் என்று அவர் பெயரில் கூட அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி ஆகிய சன்னதியில் அர்ச்சனை செய்துவிட்டு வந்துள்ளனர்.

எவ்வளவுதான் மன கஷ்டங்கள் இருந்தாலும் தந்தையின் ஆயுள்விருத்திக்காக நடத்தப்படும் பூஜையில் விஜய் கலந்து கொள்ளாதது அவரது ரசிகர்களை வேதனைப்படுத்தியுள்ளது.

கவின்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button