தமிழகம்

எடப்பாடி அரசு பள்ளியில் மரம் நடும் விழா

எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது. முன்னதாக பள்ளி வளாகத்தில் வேம்பு, புங்கன்,கொன்றை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவிகள் நட்டனர். நிகழ்ச்சியில் பள்ளியின் பசுமைப்படை அமைப்பினை தலைமை ஆசிரியர் சீதா
தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு மரங்களால் மனித குலத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், மரங்கள் வளர்பதன் மூலம் இயற்கை சார்ந்து நடைபெறும் நல்ல பல நிகழ்வுகள் குறித்தும். மரம்வளர்பதில் மாணவர்களின் பங்கு மற்றும் மரம் வளர்க்கும் வழிமுறைகள் குறித்தும் மாணவிகளிடம் விளக்கிகூறினார்.
இந்நிகழ்வில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் குழு நிர்வாகிகள் மற்றும் திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button