தமிழகம்

எடப்பாடி அருகே மாமியாரை கொலை செய்த மருமகள் தற்கொலை

எடப்பாடி அருகே மாமியாரை கட்டையால் அடித்துக்கொன்ற மருமகள், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு குறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். எடப்பாடியை அடுத்துள்ள குரும்பப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது  தாணமூத்தியூர் கிராமம், இங்கு
சேர்ந்த எல்லப்பன் அவரது மனைவி தைலம்மாள் ஆகியோருக்கு 3 மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமான
நிலையில், தைலம்மாளின் மூன்றாவது மகனான மெய்வேல் தனது மனைவி செல்வி மற்றும் குடும்பத்தினருடன், தனது தாயாரின் வீட்டின் அருகே
குடியிருந்து வந்துள்ளார்.

ஓட்டுநராக பணிபுரிந்து வரும் மெய்வேல் ஞாயிறு அன்று பணி நிமித்தமாக வெளியில் சென்று  வீடு திரும்பிய நிலையில், தனது தாயார் தைலம்மாள் தனது வீட்டருகே தலையில் பலந்த காயத்துடன் சுயநினைவு இன்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது
தாயாரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தைலம்மாள் ஏற்கனவே இறந்துபோனதை
உறுதி செய்தனர். இந்நிலையில் மெய்வேலின் வீட்டின் உள்ளே அவரது மனைவி செல்வி சேலையால் தூக்கிட்டு சடலமாக தொங்கிகொண்டிருப்பதை கண்ட
உறவினர்கள் கொங்கணாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார் செல்வியின் உடலை மீட்டு பிரேத
பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவரது வீட்டின் அருகில் ரத்தகரையுடன் கிடந்த மண்வெட்டிக்கட்டையினை கைப்பற்றிய போலீஸார் அருகில் இருந்தவர்களிடம் விசாரனை மேற்கொண்டபோது. குடிநீர் பிடிப்பதில் தைலமாளுக்கும் அவரது மருமகள் செல்விக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும் அடிக்கடி மாமியாருடன் தகராறில் ஈடுபட்டு வந்த செல்வி கோபம் முற்றிய நிலையில், மாமியாரை கடையால் தாக்கியதில் தைலம்மாள் உயிரிழந்திருக்கலாம் எனவும், அதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற செல்வி தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவல்துறை உயர் அலுவலர்கள் முகாமிட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button