அரசியல்

காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அ.ம.மு.க வேட்புமனுத் தாக்கல்

தமிழகத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக ஜூலை 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது

சேலம் மாவட்டத்தில் அயோத்தியாபட்டினம் சேலம் ஒன்றியம் வாழப்பாடி காடையாம்பட்டி உள்ளிட்ட 8 ஒன்றியங்களில் காலியாக உள்ள 12 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவில் உள்கட்சி பிரச்சினை காரணமாக வேட்பாளர்கள் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்

அதன் ஒரு பகுதியாக சேலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டிபட்டி 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும்
வேட்பாளர் சுப்பிரமணி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மலர்விழியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் வீரபாண்டி எஸ் கே செல்வம், வடக்கு மாவட்ட செயலாளர்
கே கே மாதேஸ்வரன் மேற்கு மாவட்ட செயலாளர் சங்கர் உள்ளிட்ட ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட சார் பணி செயலாளர்கள் என திரளான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button