அரசியல்

கொள்ளையடித்த பணத்தால்… உதயகுமார் பேசுகிறார் – டி.டி.வி. தினகரன்.

அ.ம.மு.க-வின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசும் போது… அதிமுகவின் பொதுக்குழுவில் நடந்த கூத்துக்களை சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் பேசி நிர்வாகிகளை உற்சாகப் படுத்தினார்.

முன்னாள் அமைச்சர் உதயகுமார் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ் என்னை ரகசியமாக சந்தித்ததாக கூறினார். நான் ஏன் ரகசியமாக சந்திக்க வேண்டும். தேவையானால் வெளிப்படையாக சந்தித்து பேசுவேன். நான் மதுரை விமான நிலையத்திற்குச் சென்றால் எனது காலுக்கு கீழே குனிந்து கும்பிட்டு வரவேற்பு வழங்கியவர் தான் ( அவரைப் போல் கும்பிட்டு காட்டினார் ) இந்த உதயகுமார்.

இன்று நயவஞ்சக கூட்டத்தில் கோடிக் கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு எனது பெயரைச் சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார். அன்று நடந்த பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவருக்கும் 15 லட்சம் முதல் நான்கு கோடி வரை செலவு செய்தும், அதிகாலையில் வந்த நீதிமன்ற தீர்ப்பால் இடி விழுந்தது போல் பழனிச்சாமியின் கனவு நிறைவேறாமல் போனது.

மேலும் பெஞ்சமின் மீது எனக்கு மரியாதை இருந்தது. ஆனால் அன்று அவர் சுயமரியாதையை இழந்து பழனிச்சாமியால் அவமானப் படுத்தப்பட்ட விதம் வருத்தம் அளிக்கிறது. சுய நினைவோடு புறக்கணிக்கிறோம் என கத்திய முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் பணத்திற்காக எதுவேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள். அவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் என்னால் பயனடைந்தவர்கள் தான். ஆனால் இன்று என்னிடம் பயனடையாதவர்கள் தான் என்னோடு இருக்கிறார்கள். என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button