தமிழகம்

சென்னை ஐஐடியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சனா குமாரி(25). இவர் சென்னை ஐஐடியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். புத்தாண்டை ஒட்டி நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிலையில், மதிய உணவு சாப்பிட்ட பிறகு விடுதியில் உள்ள அவரது அறைக்கு தூங்க சென்றார். வெகுநேரமாகியும் ரஞ்சனா குமாரி அறையை விட்டு வெளியே வரவில்லை. பின்னர், இரவு உணவு சாப்பிடுவதற்காக அவர் உடன் தங்கி படித்து வரும் மாணவிகள் ரஞ்சனாவை அழைக்க சென்றனர். கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த மாணவிகள் சம்பவம் குறித்து விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்தனர்.

அதன்படி விரைந்துவந்த விடுதி காப்பாளர் கதவை உடைத்து பார்த்த போது ரஞ்சனா குமாரி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்த போலீசார் ரஞ்சனா குமாரியின் செல்போனை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும், ரஞ்சனா குமாரி காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டாரா, வேறு ஏதும் காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button