அரசியல்

நடிகர் விஜய்யை பழிவாங்கும் உதயநிதியின் சினிமா அரசியல்..?..!

சென்னை சாலிக்கிராமம் அருணாசலம் சாலை மிகவும் பரபரப்பான போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை. இந்த சாலையில் நடிகர் விஜய் குடும்பத்துக்குச் சொந்தமான ஷோபா திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்தைச் சுற்றி சினிமா பிரபலங்களின் வீடுகள் உள்ளது. குறிப்பாக நடிகர் பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதா, நடிகை நளினி ஆகியோரின் வீடுகள் அமைந்துள்ளது. இந்த வழியாகத்தான் சினிமா பிரபலங்கள் பயணிக்கின்றனர்.

இந்த சாலையில் பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மற்ற இடங்களில் ஓரளவு வேலை முடிந்துள்ள நிலையில் நடிகர் விஜய்க்கு சொந்தமான திருமண மண்டபம் அருகே மட்டும் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக சாக்கடை கால்வாய் தோண்டப்பட்ட நிலையில் வேலையை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த இடத்தை கடக்கும் போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மண்டபத்தைச் சுற்றி சாலைகளையும் அடைத்து வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியினர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தற்போது வைகாசி மாதம் என்பதால் நிறைய முகூர்த்த நாட்களில் அனைத்து திருமண மண்டபங்களும் முன்பதிவு செய்யப்பட்டு விசேஷங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் நடிகர் விஜய்யின் திருமண மண்டபத்தில் மட்டும் எந்தவித விழாக்களும் நடைபெறாத நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடையை தோண்டி முடக்கி வைத்துள்ளனர். கடந்த வாரம் உதயநிதி இந்த வழியாகத்தான் அவரது படவிழாவில் கலந்து கொள்வதற்காக பிரசாத் லேபிற்கு வருகை தந்தார்.

நடிகர் விஜய்யை பழிவாங்குவதற்காக நடிகர் உதயநிதியின் தூண்டுதலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொள்கிறார்களா ? அல்லது ஒன்பதாவது மண்டலத்தின் செயற்பொறியாளர் ஜெயராமன் பணம் வசூலுக்காக இந்த இடத்தில் மட்டும் வேலையை நிறுத்தி வைத்துள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழாவில் நடிகர் உதயநிதி பேசும்போது தமிழ் சினிமாவின் உண்மையான “டான்” சிவகார்த்திகேயன் தான் என்று பேசியிருந்தார். இந்த பேச்சு அப்போது நடிகர் விஜய்யை குறிவைத்து தான் உதயநிதி பேசினார் என்று திரையுலகினர் பேசி வந்தனர். இந்நிலையில் நடிகர் விஜயின் திருமண மண்டபத்தை முடக்கி வைத்துள்ள மாநகராட்சி அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது உதயநிதிக்கும் இதில் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளின் விளக்கத்தைப் பெற்று வரும் இதழில் விரிவாக காணலாம்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button