தமிழகம்

ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியிடம் பாலியல் உறவு கொண்ட இளைஞன் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் உறவு கொண்டதாக சிறுமியின் தாயார்      W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான  குழுவினர் சம்பந்தப்பட்ட அஜய் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், அஜய் கடந்த 2021ம் ஆண்டு மேற்படி சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் உறவு கொண்டது தெரியவந்தது.


அதன்பேரில், W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், போக்சோ, சிறார் நீதி சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அஜயை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அஜய் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button