தமிழகம்

தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு.!பொதுமக்கள் அவதி..!

திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா அந்தியூர் ஊராட்சிக்குட்பட்ட சடையகவுண்டன் புதூர் ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் மற்றும் வாய்க்கால் உபரி நீர் பெருமளவில் நிற்பதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த வழியாக செல்லும் பேருந்துகள் எதுவும் வராததால் பள்ளி செல்லும் மாணவர்கள், வயதானவர்கள், நோயாளிகள் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலத்தின் அருகே வாய்க்கால்களில் நீர் வரத்து உள்ள காரணத்தால், பாலத்திற்கடியில் தண்ணீர் ஊற்றுகள் உருவாகி அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றினால் மீண்டும் தண்ணீர் தேங்கி விடுகிறது. மழைக்காலங்களில் இந்த பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி.கார்வேந்தபிரபு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button