பனியன் நிறுவன ஊழியர் கொலை… சிக்கிய மனைவியின் கள்ளக்காதலன்..!
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-07-at-7.56.58-PM_05_07_2022_05_08_2022.jpg)
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புரம் பகுதியில் வசித்து வந்தவர் கோபாலகிருஷ்ணன். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த இவருக்கு சுசிலா என்கிற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மேலும் கோபாலகிருஷ்ணன் சின்னக்கரையில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி புதன்கிழமை மாலை சின்னக்கரையில் நடந்துசென்று கொண்டிருந்த கோபாலகிருஷ்ணனை பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.
மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் நடந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயினர். இந்நிலையில் சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பல்லடம் போலீசார் கொலையான கோபாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-07-at-7.57.02-PM_05_07_2022_05_08_2022.jpg)
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-07-at-7.57.02-PM-1_05_07_2022_05_08_2022.jpg)
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-07-at-7.57.01-PM_05_07_2022_05_08_2022.jpg)
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-07-at-7.57.00-PM_05_07_2022_05_08_2022.jpg)
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-07-at-7.56.59-PM_05_07_2022_05_08_2022.jpg)
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-07-at-7.56.58-PM_05_07_2022_05_08_2022.jpg)
கோபாலகிருஷ்ணன் மனைவி பனியன் நிறுவனத்தில் வேலை செய்தபோது அதே நிறுவனத்தில் பணிபுரிந்த சின்னமனூரை சேர்ந்த மாரீஸ்வரன் என்பருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் பணிபுரிந்த நிறுவனத்திற்கு தெரியவரவே சுசிலாவை வேலையை விட்டு நிறுத்திவிட்டனர். பின்னிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பிரிய மனமின்றி ஒரு கட்டத்தில் சுசிலாவை மாரீஸ்வரன் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளான்.
இதற்கு தடையாக இருக்கும் கணவர் கோபாலகிருஷ்ணனை தீர்த்துக்கட்ட எண்ணி தனது நண்பர்கள் மூலமாக திருச்சியை சேர்ந்த கூலிப்படையை நாடியுள்ளனர். பின்னர் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து கூலிப்படையினரை பல்லடத்திற்கு மாரீஸ்வரன் வரவழைத்தாக கூறப்படுகிறது.
பின்னர் கோபாலகிருஷ்ணனின் நடவடிக்கைகளை நோட்டமிட்ட கூலிப்படையினர் கடந்த 4 ஆம் தேதி மாலை சின்னக்கரையில் பைக்கில் சென்ற மூன்று பேர் கோபாலகிருஷ்ணனை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.
இதனை அடுத்து கொலைக்கு மூளையாக செயல்பட்ட மாரீஸ்வரன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த மதன்குமார், வினோத், விஜய், மணிகண்டன் மற்றும் உலகேஸ்வரன் ஆகிய 6 பேரை பல்லடம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் காதலியின் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.