சினிமா

பூச்சி முருகனுக்கு குவியும் பாராட்டுக்கள்

தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளருமான பூச்சிமுருகனுக்கு குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் நிறுவனம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

நாடக நடிகராக கலைத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கி இன்று நடிகர் சங்கத்தை மீட்டெடுத்து, அந்த சங்கத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இன்று அந்த சங்கத்தின் சொத்து மதிப்பு 150 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா காலங்களில் நாடக நடிகர்கள் மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்ட போது அவர்களின் வீடுகளுக்கே சென்று சொந்தப் பணத்தில் மளிகைப் பொருட்கள், காய்கறிகளை வழங்கியுள்ளார். நாடக நடிகர்கள் மீது தீராத அன்பு கொண்ட பூச்சிமுருகன், கொரோனா காலங்களில் உயிரிழந்த 112 நாடக நடிகர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் மற்றும் உதவிகள் வழங்க ஏற்பாடு செய்து வருகிறார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவராக சிறப்பாக பணியாற்றி தமிழக முதல்வரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

இவரது சேவையைப் பாராட்டி குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. பூச்சி முருகனுக்கு கலைத்துறையினரும், அரசியல்வாதிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button