தமிழகம்

பல்லடம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மகாலட்சுமி நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தில்ராஜ், 38; மெடிக்கல் ஷாப் உரிமையாளர். அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுந்தரேசன், 38; துணி வியாபாரி இருவரும், ஆன்லைன் லாட்டரி, மற்றும் கேரள மாநில லாட்டரிகள் விற்பனை செய்து வருவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதது.

இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், நேற்று 4 ஆயிரத்து 300 ரூபாய் பணம், மற்றும் லாட்டரிகள், மொபைல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுடன் மேலும் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button