தமிழகம்

ஒரே பதிவு எண்ணில் இரண்டு ஆம்னி பேருந்துகள்… பறிமுதல் செய்த அதிகாரிகள்

சென்னை வியாசர்பாடி அருகே எம்.கே.பி நகரில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஒரே பதிவு எண்ணைக் கொண்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்த தகவலை அடுத்து அதிகாரிகள் இரண்டு சொகுசு பேருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

வியாசர்பாடி அருகே எம்.கே.பி நகரில் ஏராளமான சொகுசு பேருந்துகளுடன் இயங்கி வருகிறது ஜெய் அனுமான் டிராவல்ஸ். இந்த டிராவல்ஸில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு சொகுசு பேருந்துகள் நிறுத்தப் பட்டிருக்கிறது. இந்த தகவல் மூத்த பத்திரிகையாளர் கவனத்திற்கு வந்துள்ளது. அவர் நேரில் சென்று தகவலை உறுதி செய்தபின் சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர்கள் என்பதால் கவனமாக தகுந்த ஆதாரங்களைத் திரட்டி அதிகாரிகளுக்கு போட்டோ வீடியோ காட்சிகளுடன் தகவல் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வெங்கடேசன், முதல்நிலை ஆய்வாளர்கள் செல்வி, சரவணன் ஆகியோர் ஜெய் அனுமான் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட இரண்டு பேருந்துகளின் இஞ்சின், சேஸ் நம்பர்களை ஆய்வு செய்தபின் இரண்டு பேருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரிம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது சம்பந்தமாக கடந்த காலங்களில் எவ்வளவு வருடங்களாக இதுபோன்ற மோசடிகள் நடைபெற்றது என்பதையும் விசாரணை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக சமூக ஆர்வலரும், முன்னனி வார இதழின் மூத்த பத்திரிகையாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட்டு தகவலை உறுதி செய்தபின் அந்த பேருந்துகளின் உரிமையாளரிடம் இரண்டு பேருந்துகளில் ஒரே பதிவு எண் இருக்கிறதே ஏன் என்று கேட்டிருக்கிறார். அந்த டிராவல்ஸ் உரிமையாளர் வழக்கறிஞர் என்பதால் ஆமாம் அப்படித்தான் இருக்கும் உன்னால் முடிந்ததை செய்துகொள் என்று பேசியிருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button