தமிழகம்

திருப்பூரை பதற வைத்த பார்சல் கொலை..

திருப்பூர் அருகே இளம் பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைத்து சாலை ஓரமுள்ள சாக்கடை வாய்க்காலில் வீசிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் தாராபுரம் சாலையில் புதுநகர் ஒத்தக்கடை பகுதியில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடையில் சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொது மக்கள் அருகே சென்று பார்த்த போது சூட்கேசில் ரத்தக்கரை காணப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊரக காவல் நிலைய போலீசார் சூட்கேசை திறந்து பார்த்த போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளம்பெண் படுகாயங்களுடன் நைட்டி அணிந்து பிணமாக இருந்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துணை ஆணையர் ரவி தலைமையில் உதவி ஆணையர்கள் வரதராஜன், கோபாலகிருஷ்ணன் ஆய்வாளர்கள் ஆனந்தன், ரமேஷ் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இக்கொலை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகர காவல் துறையின் எல்லையில் நடந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொடூரமாக பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று தாக்கி சூட்கேசில் திணித்து அப்புறப்படுத்திய விதம் கண்டிப்பாக ஒருவரால் முடியாது என்பதை காட்டுகிறது. மேலும் பெண்ணின் உடலில் கடுமையாக தாக்கப்பட்டதற்கான காயங்கள் காணப்படுவதாலும் பெண் நைட்டி அணிந்திருப்பதாலும் ஏதாவது வீட்டில் கொலை செய்து சாக்கடை கால்வாயில் வீசிச்சென்றிருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுகிறது.

மேலும் கொலைகாரன் தான் செய்த கொலையை மறைக்க சூட்கேசை பயன்படுத்தினாலும் எதனால் பொதுவான இடத்தில் சுலபமாக வீசிச்சென்றான் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் இது போன்று கொடூரமான கொலை பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசாரின் விசாரணை தொடர்கிறது.

தேர்தல் நேரத்தில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் இது போன்ற இளம் பெண்ணை கொலை செய்து சூட்கேசில் பார்சல் செய்து வீசிச்சென்ற சம்பவம் போலீசாருக்கு சாவல் விடுவது போல் உள்ளது.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button