தமிழகம்
இல்லம் தேடி புத்தகம் வழங்கும் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2022/01/d112.jpg)
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் வகுப்புகள் 03.01.2022 அன்று தொடங்கப்பட்டது.
ஒமிக்ரான் தொற்றின் பரவல் காரணத்தினால் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலையிலும் அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 6-ஆம் வகுப்பு மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் மூன்றாம் பருவத்திற்கான தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்களை தலைமையாசிரியர் ஷேக் நபி, வகுப்பாசிரியர்கள் முகமது மாலிக் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் மாணவர்களின் இல்லத்திற்கே நேரடியாக சென்று வழங்கினர்.
மேலும் தலைமையாசிரியர் மாணவர்களுக்கு பாடம் மற்றும் இணையவழி வகுப்புகள் சம்பந்தமாக அறிவுரைகளை வழங்கினார்.
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2022/01/d11-1024x576.jpg)