தமிழகம்

மஞ்சப்பை பயன்படுத்த – மாணவர்கள் உறுதிமொழி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் மீண்டும் மஞ்சப் பை” மக்கள் இயக்கத்தை (டிசம்பர் 23-ஆம் தேதி) தொடங்கி வைத்து சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம் தான் மஞ்சப் பை” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு மக்கள் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப் பை பயன்படுத்த முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். அதனை தொடர்ந்து மதுரை கோ.புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஷேக் நபி மற்றும் மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து மஞ்சப் பை பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button