சினிமா

மீ டூ-வில் சிக்கினார் நடிகர் சங்க செயலாளர் விஷால்: டிவிட்டர் பக்கத்தில் பரபரப்பை பற்ற வைத்த இளம்பெண்

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள மீ டூ விவகாரத்தில் சிக்கியுள்ளார் நடிகர் விஷால். விஷ்வதர்ஷினி என்ற பெண் தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டிற்கு அதிகாலை 2 மணிக்கு நடிகர் விஷால் வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
2 மணி நேரம் அங்கு தங்கியிருந்த விஷால் அதிகாலை 4 மணியளவில் அவசரம் அவசரமாக பின்வாசல் வழியாக வெளியேறி குடியிருப்பின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து தப்பி ஓடியதாக கூறியுள்ளார்.
அந்த வீட்டிற்கு அந்த நேரத்தில் விஷால் வந்தது ஏன் என்பது குறித்த அதிர்ச்சி தகவல்களையும் அவர் முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதுவரை பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட சிலர் மீ டூ விவகாரத்தில் சிக்கிய நிலையில், தற்போது நடிகர் விஷாலும் “மீ – டூ” வளையத்திற்குள் வந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button