தமிழகம்

மனிதாபிமான காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள்

சென்னை அண்ணா நகர் அருகே டி.பி.சத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கல்லைறைத்தோட்டம் நடைபாதையில் மயங்கி கிடந்த இளைஞர் ஒருவரை பெண் காவல் ஆய்வாளர் காப்பாற்றிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி கல்லறைத் தோட்டம் அருகே நடைபாதையில் மயங்கி கிடந்த இளைஞர் ஒருவரை தனது தோளில் சுமந்து மருத்துவ மனையில் சேர்க்க ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளார்.பிறகு மருத்துவ மனைக்குச் சென்று அந்த இளைஞர் எப்படி இருக்கிறார் என்பதையும் விசாரித்துள்ளார்.

இறந்து விட்டார் என கருதப்பட்ட இளைஞரை துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்ற உதவிய ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button