அரசியல்

தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள முதல்வருக்கு அழைப்பு

தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருகை தருமாறு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு தேவர் மக்கள் இயக்கத்தின் தலைவர் சங்கிலி பெ.மாரிப்பாண்டியன் நிர்வாகிகளுடன் அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு தேவரின் ஆசியை பெறுவது வழக்கம்.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் கடந்த காலங்களில் வருடம் தோறும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு வந்துள்ளார்.இந்த முறை தமிழ் நாட்டின் முதலமைச்சராக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் கொடுத்து அழைத்துள்ளார் தேவர் மக்கள் இயக்கத்தின் தலைவர் சங்கிலி பெ.மாரிப்பாண்டியன்.

இதேபோல் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் பாராளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button