Featuredதமிழகம்தமிழகம்

குழந்தையின் சிகிச்சைக்கு ஒரு நாள் வருமானத்தை கொடுத்த டீக்கடைக்காரர்!

முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சையை சேர்ந்த பாரதி என்ற குழந்தையின் சிகிச்சைக்கு உதவ, டீக்கடைக்காரர் ஒருவர் தனது கடையில் வரும் ஒரு நாள் வருமானத்தை கொடுத்து, மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒன்றரை வயதான பாரதி என்ற அந்த குழந்தையின் சிகிச்சைக்கு அமெரிக்காவில் இருந்து 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து வாங்க பெற்றோர் நிதி திரட்டி வருகின்றனர்.

நாஞ்சிக்கோட்டை சாலையில் டீக்கடை நடத்தி வரும் மணி என்பவர், தனது கடையின் ஒரு நாள் வருமானத்தை கொடுத்து உதவியுள்ளார். இதற்காக கடையில் உண்டியல் வைத்து, கடைக்கு வருபவர்கள் இன்று ஒரு நாள் என்ன சாப்பிட்டாலும் அதற்கான தொகையை உண்டியலில் போடுமாறும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகிறார். இதேபோன்று, குழந்தையின் உறவினர்கள் ஈரோடு மாவட்டத்திலும் நிதி திரட்டினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button