தெருவோர விலங்குகளுக்கு உணவளிக்கும் தம்பதியர்
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2021/09/IMG-20210903-WA0018.jpg)
உணவின்றித் தவிக்கும் தெருவோர விலங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர் திருச்சிராப்பள்ளியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நடத்தி வரும் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியர்.
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2021/09/IMG-20210903-WA0019-1024x484.jpg)
உணவின்றித் தவிக்கும் பிராணிகளான தெருவோரநாய்கள், ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பல ஆண்டுகளாக உணவளிக்கின்றனர். இதுகுறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் கூறுகையில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் ஆதரவற்று தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு கடந்த பல வருடங்களாக உணவளித்து வருகிறோம்.
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2021/09/IMG-20210903-WA0017-1024x900.jpg)
திருச்சி புத்தூர் பிஷப்குளத் தெருவில்
சுற்றி திரியும் ஆடு ,மாடு ,நாய், பூனை போன்ற விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவிற்கும், குடிநீருக்கும் தொட்டி வைத்து உணவும்,குடிநீரும் அளித்து வருகிறோம்.
மேலும் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ள ஆதரவற்ற விலங்குகளுக்கு தங்களால் இயன்ற உணவை அளிக்க வேண்டும் என்று கூறுகிறார்.