அரசியல்

பதற்றத்தில் பழனிச்சாமி..!

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் பழனிச்சாமி பதறிப்போய் ஆளுநரை சந்தித்து பேசியிருக்கிறார்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் விசாரணையில் சயன் என்பவர் பழனிச்சாமி பெயரை கூறியதாக தகவல்கள் வந்தன. கொலை,கொள்ளை வழக்கில் பழனிச்சாமி தவறு செய்யவில்லை என்றால் வழக்குகளை சந்திப்பது தானே நியாயம். பழனிச்சாமி முதல்வராக இருந்த போதே முன்னாள் அமைச்சர்கள் மீது பாமக,திமுக வினர் ஆளுநரை சந்தித்து ஊழல் புகார்களை ஆதாரத்துடன் வழங்கினர்.

அப்போது கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக பழனிச்சாமிக்கு உள்ள தொடர்புகள் பற்றி அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இப்போது வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னையும் இந்த வழக்கில் சேர்த்து விடுவார்களோ என்ற அச்சத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பயன்படுத்தி எம்எல்ஏ க்கள் அதிமுக நிர்வாகிகளுடன் ஆளுநரை சந்தித்து பேசியிருக்கிறார்.

பழனிச்சாமி தவறு செய்யவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும். மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயப்பட வேண்டும். கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் உண்மை தன்மைகளை பழனிச்சாமி நன்றாக அறிந்தவர் என்பதால் வழக்கின் வீரியத்தை உணர்ந்து வேதனையில் இருப்பதாகவே தெரியவருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button