அரசியல்

தீரன் சின்னமலையின் 216வது நினைவு தினம்

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216வது நினைவு தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுச்செயலாளரும்,ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா தீரன் சின்னமலையின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கூறுகையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை போல் நாட்டிற்காக சேவையாற்ற தன்னலமற்ற பல தீரன் சின்னமலைகள் வரவேண்டும் என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button