தமிழகம்

உயிர் காக்க இரத்தம் வழங்கிய இளைஞர்களை பாராட்டிய பொதுமக்கள்

விபத்தில் படுகாயமடைந்தவருக்கு உயிரை காப்பாற்ற இரத்த தானம் வழங்கிய தமுமுக நிர்வாகிக்கு குவியும் பாராட்டுகள்.

நெல்லை மாவட்டம்
மானூர் மயிலப்பபுரத்தை சேர்ந்த வேல்பாண்டி எனபவரின் மகன் பழனிக்குமார் நெல்லையில் நடந்த விபத்தில் காலில் அடிபட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவருக்கு  
காலில் ஆபரேஷன் செய்வதற்கு 0 Possitive இரத்தம் தேவை என்று மருத்துவர்கள் தெரியப்படுத்தியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட பழனிக்குமாரின் உறவினர்களிடம் அவசரமாக இரத்தம் தேவைப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறியும் பாதிக்கப்பட்டவருக்கு இரத்தம் வழங்க அவரது உறவினர்கள் யாரும் முன் வரவில்லை. இதை கேள்விபட்ட நெல்லை மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணி செயலாளரும், ஏற்கனவே 27 முறை இரத்த தானம் செய்தவருமான யூசுப் சுல்தான் என்பவரும் , தமுமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருமான A. காஜா என்பவரும் இரத்த தானம் செய்ய முன்வந்து 26.07.2021 அன்று மதியம் 1 மணியளவில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி ரத்த வங்கியில் ரத்த தானம் செய்தனர்.

தக்க சமயத்தில் அறுவைச் சிகிச்சைக்கு தேவையான இரத்தத்தை வழங்கிய இளைஞர்களை பாதிக்கப்பட்டவரின் உறவினர்களும் பொதுமக்களும் பாராட்டினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button