தமிழகம்

ஜாதி, மதம், மத்திய, மாநில அரசு குறித்து சர்ச்சை பேச்சு : பனைவிளை பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா கள்ளிக்குடியில் கைது!

ஜாதி, மதம் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் கன்னியாகுமரி மாவட்டம், பனைவிளை பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார்.

ஜார்ஜ் பொன்னையா பேசிய வீடியோ வைரலானதை அடுத்து, அவர் மீது சட்ட விரோதமாக கூடுதல், ஜாதி, மதம் மற்றும் இரு தரப்பினர் இடையே விரோதத்தை உருவாக்குதல், பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகளை அவதூறு செய்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, தலைமறைவான ஜார்ஜ் பொன்னையாவை தனிப்படைகள் அமைத்து தேடி வந்த போலீசாருக்கு அவர் கன்னியாகுமரியில் இருந்து தப்பி கார் மூலம் சென்னை நோக்கி செல்வதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடி அருகே போலீசார் காரை மடக்கி பிடித்து ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button