தமிழகம்

தியாகத் திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாள்…முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் வாழ்த்து.

இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பொதுச் செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது.

5000 ஆண்டுகளுக்கு முன்னர் நபி இப்ராஹிம் அவர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறும் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி மகிழும் முஸ்லிம்கள் அனைவருக்கும் இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பில் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கொரணா பெருந்தொற்று 2வது அலை முடிவுக்கு வந்து மூன்றாவது அலை வரப் போகிறது என்ற அச்சத்தோடு அன்றாடம் மக்கள் வாழ்ந்து வருகின்ற சூழலில் இந்த தியாக திருநாளை கொண்டாடுகின்ற நாம் அனைவரும் இந்த பெருந்தொற்றில் இருந்து உலக மக்கள் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் பாதுகாத்திட பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் பொதுச்செயலாளர் ஏ.ஜெயினுல் ஆலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button