தமிழகம்

பரமக்குடி அருகே சோமநாதபுரத்தில் தாய் மகனை தாக்கிய 3 பேர் : சண்டை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்

பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரத்தில் இடப் பிரச்சினை தொடர்பாக தாய் மகனை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சோமநாதபுரத்தை சேர்ந்தவர் வடிவேல் மற்றும் நாகமுத்து இவர்களுக்குள் இடப்பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நாகமுத்து தரப்பினர் வடிவேல் மற்றும் அவரது தாய் சாவித்திரியை மண்வெட்டியால் தாக்கி கற்களை எறிந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் காயம் அடைந்தவர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வடிவேலுவின் புகாரின் பேரில் நாகமுத்து,பஞ்சவர்ணம், கோபால் ஆகிய 3 பேர் மீது எமனேஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் தாக்கிய சண்டைக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பதட்டத்தை ஏற்படுத்தியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button