அரசியல்
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு…கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் முழு மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் உதவித்தொகை மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்கள், அரிசி வழங்கும் விழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு 198 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், முன்னாள் அமைச்சர்கள் சுப தங்கவேலன், டாக்டர் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில்..
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு இருக்காது என்ற நிலை வந்தவுடன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்படும். சிவகங்கையில் அபகரிப்பு செய்யப்படிருந்த 10 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை முதலமைச்சர் வழிகாட்டுதல்படி இன்று ஆய்வு செய்ய வந்தேன்.
