தமிழகம்

திருச்சியில் அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்யும் தம்பதியர்

வயதானவர்கள், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்ட பெற்றோர்கள், ஏதோ ஒரு காரணத்தால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் அனைத்து நகரங்களிலும் வீடு வாசல் இன்றி அனாதைகளாக சாலையில் திரிந்து மக்களிடம் கையேந்தி ஜீவனம் நடத்தி கிடைத்த இடத்தில் உண்டு உறங்கி வருகிறார்கள். அவ்வாறு சாலையோரம் சுற்றித் திரிபவர்கள் ஆதரவற்றவர்களோ, மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவோ, வெளிமாநிலத்தவர்களாகவோ இருக்கிறார்கள். அவர்களில் சிலர் உடல் நலக்குறைவாலோ விபத்து காரணமாகவோ, குடிப்பழக்கத்தாலோ இறந்து அனாதை பிணங்களாக பொது இடங்களில் கிடப்பார்கள்.

அவ்வாறு ஆதரவற்ற அனாதை பிணமாக இருப்பவர்களை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சரக காவல் நிலையத்திற்கு தகவல் அளிப்பார்கள். காவலர்கள் அனாதைப் பிணங்களை மீட்டெடுத்து அவர்கள் குறித்த தகவலை விசாரித்து பின்பு அவரை அனாதைப் பிணம் என அறிவிப்பார்கள். அனாதைப் பிணமாக இருப்பவர்கள் முன்பின் தெரியாத நபராகவும் விலாசம் அறிந்தவராகவும் இருப்பார்கள். பின்பு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அரசு மருத்துவமனையில் பதிவு செய்வார்கள். மருத்துவ இருக்கை அதிகாரி ஒப்புதலுடன் காவல்துறையினர் மாநகராட்சி மூலமோ தொண்டு நிறுவனங்கள் மூலமோ நல்லடக்கம் செய்வார்கள். அவ்வாறு அனாதை பிணங்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளவர்களை எல்லா இறுதி சடங்குகளையும் செய்து அடக்கம் செய்வதில் தன் வாழ்நாளை செலவிட்டு வருபவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி புத்தூர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியினர்.


யோகா ஆசிரியர் விஜயகுமார் நூறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அஞ்சல்தலை, நாணயங்கள், பணத்தாள்கள், பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர் ஆவார்.
யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உள்ளிட்டோர் தன்னலமற்ற சேவைக்கு உலக தமிழ் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது. தன்னலமற்ற சேவையில், அனாதைப் பிணங்களை தம்பதி சகிதமாக அடக்கம் செய்வார்கள் இதில் யாருக்கேனும் பணி இருப்பினும் கணவனோ அல்லது மனைவியோ ஒருவர் முன்னின்று இறுதி சடங்குகளை தனது சொந்த நிதியில் செய்வார்கள்.

அனாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்து இறுதி சடங்கு செய்வது குறித்து தம்பதி சகிதமாக யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்பேசுகையில், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை 1995 ஆண்டுமுதல் நடத்தி வருகிறோம் அறக்கட்டளை சார்பாக 5 ஆயிரம் நூல்கள் வைத்து இலவச நூலகம் அமைத்துள்ளோம் சேவை என்றால் பொறுமை சகிப்புத்தன்மை பொருளாதாரமும் இருக்க வேண்டும் எங்களது ஊதியத்தில் ஒரு பங்கினை சேவைக்காகவே செலவிட்டு வருகிறோம் உலகில் பிறக்கும் பொழுது மகிழ்ச்சியும் இறக்கும்பொழுது துக்கமும் இருப்பது மனித சமூகத்துக்கே உரியது ஆனால் உற்றார் உறவினர் சுற்றத்தார் நண்பர்கள் இன்றி ஆதரவற்று சாலையோரம் இறப்பது துரதிருஷ்டமானது.

காவல்துறையினரின் விசாரணை முடிந்ததும் ஆதரவற்றவர் என்றால் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நடத்தி வரும் எங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். சடலத்தைப் பெற்று காவலர்களுடன் சென்று முறைப்படி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து நல்லடக்கம் செய்வோம்.
அனாதைப் பிணங்களாக நல்லடக்கம் செய்பவர்களில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று இறந்தவர்கள்,விபத்தில் இறந்தவர்கள், மது அருந்தி இறந்தவர்கள் என பலர் உண்டு இதில் சிலர் மருத்துவமனையில் பெற்றோரை சேர்த்துவிட்டு கைவிட்டு சென்றவர்களும் உண்டு இவ்வாறு பல விதத்தில் அனாதைகளாக இறக்க நேரிடுபவர்களை அமரர் ஊர்தியில் கொண்டு கொண்டு சென்று நல்லடக்கம் செய்கின்றோம்.


இறந்தவர் எந்த மதம்,சாதியென்று தெரியாது. அவருடைய குடும்ப உறுப்பினர் இருந்தால் என்னவெல்லாம் செய்வார்களோ அதை நாங்கள் செய்கிறேன்றோம். இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ நண்பர்களை அழைத்து பிரார்த்தனை செய்து முறைப்படி அடக்கம் செய்கின்றோம். இப்பணி ஆத்மார்த்தமான பணி. இயன்றதை இயலாதவர்களுக்கு செய்து வருகிறோம் என்றனர்.கொரொனா பெருந் தொற்று பேரிடர் காலங்களிலும் அனாதை பிரேதங்களை தொடர்ந்து நல்லடக்கம் செய்து வருகிறோம் என்றனர்.

அனாதை பிரேதங்கள் நல்லடக்க உதவிக்கு

அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளை
14/44B, பிஷப் குளத் தெரு
புத்தூர், திருச்சி-620017
அலைபேசி எண்
9842412247

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button