தமிழகம்

காங்கிரஸில் இணைந்த ஓபிஎஸ் உறவினர்…!

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சட்டமன்ற தொகுதியில் ஆர் எஸ் மங்களம் சுற்று வட்டாரத்தில் பிரபலமான பத்திரிகையாளரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பண்ணீர்செல்வத்தின் உறவினருமான ஐஜி கண்ணன் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

அதிமுக வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியதால் தென்மாவட்டங்களில் படுதோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து அதிமுகவில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமிக்கும், பண்ணீர்செல்வத்துக்கும் மோதல் ஏற்பட்டது. தேர்தல் தோல்விக்கு பழனிச்சாமி தான் காரணம் என்று பண்ணீர்செல்வம் குற்றம் சாட்டினார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்டுள்ள நீயா ?நானா ? சண்டையால் தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

மகாத்மா ஸ்ரீநிவாசன் பத்திரிகை ஆசிரியர் ஐஜி கண்ணனுக்கு மனித உரிமைப் பிரிவின் மாநில செய்தி தொடர்பாளர் பதவி வழங்கிய போது…

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் மாத இதழ் பத்திரிகையின் ஆசிரியரும் ஓ.பண்ணீர்செல்வத்தின் உறவினருமான ஐஜி. கண்ணன் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைப் பிரிவின் மாநிலத் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் கண்ணனுக்கு மனித உரிமைப் பிரிவின் மாநில செய்தி தொடர்பாளர் பதவி வழங்கி கொளரவித்துள்ளார் .

இதனைத் தொடர்ந்து கண்ணன் நமது செய்தியாளரிடம் கூறுகையில்…இனி வரும் காலங்களில் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களூம் கட்சியில் இருந்து வெளியேறும் படலம் அதிகரிக்கும் என்றதுடன் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமைக்கும் மாநில தலைமைக்கும் நமது இதழின் வாயிலாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறினார் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button