தமிழகம்

பரமக்குடியில் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடும் அதிகாரிகள்…!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி பகுதியில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ள நிலையில் பொதுமக்கள் அரசின் விதிகளை மதிக்காமல் சுற்றித்திரிகிறார்கள். அதனை கட்டுப்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புதிய அரசுக்கு ஒத்துழைக்காமல் இருப்பதால் தான் பொதுமக்கள் வெளியில் சுற்றித்திரிவதாகவும் சமூக ஆர்வலர்களும்,பொதுமக்களும் கூறுகிறார்கள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பரமக்குடி சின்னக்கடை பகுதியில் ஆடு,கோழி இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தெருக்களில் மக்கள் நடமாட்டமும் வழக்கத்திற்கு மாறாக இன்று அதிகமாக இருந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பரமக்குடி பகுதியில் ஆடு கோழி இறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்கியது யார்? நகர் முழுவதும் சில தினங்களாக மக்கள் சுற்றி வருவதும் , விளையாட்டு திடல்களில் இளைஞர்கள் விளையாடிய காட்சிகள் வந்த வண்ணம் உள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் பரமக்குடி நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி சரவணகுமாருக்கு தகவல் தெரிவிக்க அவரது கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டால் அவர் போணை எடுப்பதே இல்லை.

கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் பரமக்குடி சுகாதார அதிகாரி போன்ற ஒருசிலரின் செயல்பாடுகளால் தான் ஒட்டுமொத்த அதிகாரிகளுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து, நேர்மையான அதிகாரிகளை நியமித்தால் தான் பணிகள் சிறப்பாக நடைபெறும் என்கின்றனர் அப்பகுதி மக்கள் .

அரசின் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடும் அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிபார்ப்பாக உள்ளது.

வெ.சங்கர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button